கொரோனாவால் தாய் உயிரிழப்பு-நேரில் பார்க்கமுடியாத மகன் எடுத்தமுடிவு! பலரின் இதயத்தை கலங்க வைத்துள்ள புகைப்படம்

கொரோனாவால் தாய் உயிரிழப்பு-நேரில் பார்க்கமுடியாத மகன் எடுத்தமுடிவு! பலரின் இதயத்தை கலங்க வைத்துள்ள புகைப்படம்

கொரோனா தொற்றால் உயிரிழந்த தனது தாயை மருத்துவமனையின் ஜன்னலில் ஏறி அமர்ந்து பார்க்கும் மகனின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி பார்வையாளர்களின் இதயத்தை கலங்கடிக்க வைத்துள்ளது.

பலஸ்தீன நாட்டைச் சேர்ந்த ஜிகாத் அல் ஸ்வைட்டி என்ற இளைஞரின் தாய் ரஸ்மி அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஹெப்ரான் மாநில மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், 73 வயதான தனது அம்மாவைப் பார்க்க மருத்துவமனைக்கு வந்த சில மணி நேரங்களிலேயே தாய் இறந்துவிட்டார் என்ற செய்தியை மருத்துவர்கள் மகனுக்கு தெரிவித்திருக்கிறார்கள்.

இதனால், கதறி அழுத இளைஞரால் தாயை நேரில்கூட பார்க்கமுடியவில்லை. அவருக்கும், கொரோனா தொற்றிவிடும் என்பதால் மருத்துவர்கள் அவரை அருகில் சென்று பார்க்க அனுமதிக்கவில்லை.

இதனால், மருத்துவமனையின் கட்டடத்தில் ஏறி இறந்துபோன தனது தாயை சோகத்தோடு பார்த்த காட்சி மருத்துவமனையில் இருந்தவர்களை கலங்கடித்தது.

30 வயதாகும் அந்த இளைஞன் தனது தாயை மருத்துவமனை ஜன்னலில் பார்க்க சோகத்தோடு அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி பலரையும் கலங்கவைத்திருக்கிறது.