மூழ்கிய படகிலிருந்த 39 பேரும் உயிர் தப்பவில்லை: சீனா அறிவிப்பு…!

மூழ்கிய படகிலிருந்த 39 பேரும் உயிர் தப்பவில்லை: சீனா அறிவிப்பு…!

இந்து சமுத்திரத்தில் கவிழ்ந்த சீன மீன்பிடிப் படகில் இருந்த 39 பேரில் எவரும் உயிர் தப்பவில்லை என சீன அமச்சரகம் இன்று தெரிவித்துள்ளது.

கடந்த 16 ஆம் திகதி இப்படகு கவிழ்ந்தது. இப்படகில் 17 சீனர்கள், 17 இந்தோனேஷியர்கள், 5 பிலிப்பீனியர்கள் இருந்தனர். 

இப்பகுதியில் இலங்கை, அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளின் கடற்படையினர் தேடுதல்களை மேற்கொண்டுள்ளனர்.

நேற்று 7 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆரம்ப விசாரணைகளின் படி, இப்படகிலிருந்து எவரும் உயிர்த்தப்பவில்லை எனத் தெரியவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.