கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக நிதி திரட்டும் டு ப்ளெசிஸ்!

கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக நிதி திரட்டும் டு ப்ளெசிஸ்!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்காக, தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான பாப் டு ப்ளெசிஸ் நிதி திரட்ட முன்வந்துள்ளார்.

டு ப்ளெசிஸ் தன்னுடைய IXU ரக புதிய துடுப்பு மட்டை மற்றும் தான் அணிந்த 18ஆம் இலக்க இளஞ் சிவப்பு நிற சீருடை என்பவற்றை கொவிட்-19 வைரஸினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்காக ஏலம் விட தீர்மானித்துள்ளார்.

குறித்த சீருடையானது 2016ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியுடன் நடைபெற்ற ஒருநாள் போட்டியின் போது டு ப்ளெசிஸ் அணிந்திருந்த சீருடையாகும்.

இவ்வாறு ஏலத்தில் விடப்படும் தன்னுடைய பொருட்களின் மூலம் வரும் தொகையை தென்னாபிரிக்காவில் கொவிட்- 19 வைரஸ் பாதிப்பிற்குள்ளான குழந்தைகளின் நலனுக்காக கொடுக்க டு ப்ளெசிஸ் முன்வந்துள்ள நிலையில், தென்னாபிரிக்கா பணப் பெறுமதியில் 5 இலட்சம் வரையில், இவ்வாறு நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த திட்டம் ஹில்சோங் ஆப்ரிக்கா பவுண்டேஷன் சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.