பராமரிப்பு நிலையத்திலிருந்து மூன்று சிறுமிகள் தப்பியோட்டம்...

பராமரிப்பு நிலையத்திலிருந்து மூன்று சிறுமிகள் தப்பியோட்டம்...

மடத்துகம நகருக்கு அருகில் இயங்கும் பராமரிப்பு நிலையத்தில் இருந்த மூன்று சிறுமிகள் அந்த பராமரிப்பு நிலையத்திலிருந்து தப்பி ஓடியுள்ளதாக மடத்துகம காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

15, 16 மற்றும் 17 வயதுடைய மூன்று சிறுமிகளே தப்பி ஓடியவர்களாவர்.

இவர்கள் மூவரும் கலென்பிடுனுவெவ, நொச்சியாகம மற்றும் தலாவ பிரதேசங்களில் வசிக்கும் சிறுமிகள் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

நீதிமன்ற உத்தரவின் பேரில், இந்த மூன்று சிறுமிகளும் இந்த பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.