
மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்...!
நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய மேல்,சப்ரகமுவ,மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி மற்றும் மாத்தரை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என அத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.