யாழ் - கொழும்பிற்கு புதிய குளிரூட்டப்பட்ட புகையிரத சேவைகள் - வெளியான விபரம்..!

யாழ் - கொழும்பிற்கு புதிய குளிரூட்டப்பட்ட புகையிரத சேவைகள் - வெளியான விபரம்..!

யாழ்ப்பாணம் ஓடிசி என்ற முழுமையாக குளிரூட்டப்பட்ட புதிய புகையிரத சேவை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து, பெருந் தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி விசேட புகையிரதம் இன்று வியாழக்கிழமை(13) பயணித்தது.

இந்த விசேட புகையிரதத்தில் போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன உட்பட்ட புகையிரத திணைக்கள அதிகாரிகள் அனுராதபுரம்- வவுனியா வரையில் அமைக்கப்பட்ட புதிய ரயில் பாதை அமைப்பின் கண்காணிப்பு நடவடிக்கையாக யாழ்ப்பாணம் வருகை தந்தனர். 

இந்த விசேட புகையிரதமானது அதிகாலை 5.45 மணிக்கு புறப்பட்டதுடன், யாழ்ப்பாணம் பிரதான புகையிரத நிலையத்தை மாலை 3 மணியளவில் வந்தடைந்தது. 

போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் வரவேற்றார்.

யாழ் - கொழும்பிற்கு புதிய குளிரூட்டப்பட்ட புகையிரத சேவைகள் - வெளியான விபரம் | Jaffna To Colombo Train Odisi Time Table Av Train

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன ,  “யாழ்ப்பாணம் ஓடிசி என்ற முழுமையாக குளிரூட்டப்பட்ட புதிய புகையிரத சேவைக்காக பயணி ஒருவரிடமிருந்து கட்டணமாக 4000 ரூபா அறவிடப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் இருந்து கல்கிசை வரையிலான மற்றுமொரு குளிரூட்டப்பட்ட புகையிரத சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. 

இது கல்கிசையில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை காலை 6 மணிக்கு வந்தடையும். இதேபோல் யாழ்ப்பாணத்தில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு கல்கிசையை அதிகாலை 06 மணிக்கு சென்றடையும்” - என்றார்.