அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தகவல் - வெளியான புதிய சுற்றறிக்கை..!
அரச ஊழியர்களுக்கு புதிய சுற்றறிக்கை ஒன்றை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது.
அரச ஊழியர்களுக்கு ஊதியம் இல்லாமல் விடுப்பு எடுக்கும் முறையை அறிவித்தே இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி விடுமுறை பெறும் அரசு ஊழியர்கள் வெளிநாடு செல்லவோ அல்லது நாட்டில் தங்கவோ வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, அந்தந்த விடுமுறையை எடுக்கும்போது அவர்களின் வயது மூப்பு அல்லது ஓய்வூதியத்திற்கு எந்தத் தடையும் இருக்காது என்றும் பொது நிர்வாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.