நிரந்தர நியமனம் கோரி வடக்கில் கவனயீர்ப்பு போராட்டம்

நிரந்தர நியமனம் கோரி வடக்கில் கவனயீர்ப்பு போராட்டம்

வடக்கு மாகாணத்தில் டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் சுத்திகரிப்பு பணியினை மேற்கொள்ளும் ஊழியர்கள்  கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இந்த கவனயீர்ப்பு போராட்டமானது யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் ஆகியவற்றுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இப்போராட்டத்தில் அவர்கள் முன் வைத்த கோரிக்கைகளாவன,

“எமக்கு வழங்கப்படுகின்ற வேதனத்தை உயர்த்த வேண்டும் மற்றும் எங்களுக்கான நிரந்தர நியமனத்தை வழங்க வேண்டும் ” என அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.