முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தில் ஒரு வாரமாக கடல் நீரில் விளக்கெரியும் அதிசயம்

முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தில் ஒரு வாரமாக கடல் நீரில் விளக்கெரியும் அதிசயம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பொங்கல் நிகழ்வினை முன்னிட்டு முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தின் பொங்கல் நிகழ்வுகள் இன்று நடைபெற்று வருகின்றது. ஆலய வளாகத்தினை சூழ்ந்து படையினர் குவிக்கப்பட்ட போதும் மக்கள் வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

கடந்த 01.06.2020 அன்று உப்பு நீரில் விளக்கெரிப்பதற்காக முல்லைத்தீவு சிலாவத்தை கடல் நீர் தீர்த்தம் எடுத்து வரப்பட்டு கடந்த ஏழு நாட்களாக முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தில் விளக்ககெரிக்கப்பட்டு வரும் அற்புத காட்சி நடைபெற்று வருகின்றன

இந்த நிலையில் இன்று காட்டு விநாயகர் ஆலய பொங்கல் நிகழ்வு நடைபெற்று வருகின்றது மக்கள் விநாயக பெருமானின் அருளை பெற்றுக்கொள்ள வருகைத்தந்து கொண்டிருப்பதை அவதனிக்க முடிந்துள்ளது. பொலிஸார், படையினர், சுகாதார பணி தொண்டர்கள் என அனைவரும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றார்கள்

மக்கள் கூட்டத்தை தவிர்த்துக்கொள்ளுமாறு ஆலய நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் அறிவித்தல் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தாலும் மக்கள் வழிபாட்டிற்காக சென்று வருவதை அவதானிக்க முடிந்துள்ளது.