பாணந்துறையில் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்தவர் கைது!

பாணந்துறையில் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்தவர் கைது!

களுத்துறை மாவட்டத்தின் பாணந்துறை பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட நபரிடம்  இருந்து 250 போதை மாத்திரைகள், 7 ஐஸ் ரக போதைப்பொருள் அடங்கிய பக்கற்றுகள், கேரளா கஞ்சா மற்றும் சிகரெட்டுகள் என்பனவும் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த சந்தேக நபர் பாணந்துறை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள பாடசாலைகள் மற்றும் தனியார் வகுப்பு மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை செய்துவந்துள்ளதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.