கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது முச்சக்கரவண்டி மோதி விபத்து.

கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது முச்சக்கரவண்டி மோதி விபத்து.

பண்டாரகம பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் போக்குவரத்து உத்தியோகத்தர்கள் மீது முச்சக்கரசவண்டி மோதியதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

பண்டாரகம - கம்மன்பில ஏரிக்கு அருகில் நேற்று(26.07.2023) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டிருந்தபோது எதிரே வந்த முச்சக்கரவண்டி இவர்கள் மீது மோதியுள்ளது.

கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது முச்சக்கரவண்டி மோதி விபத்து | Police Accident Three Wheeler Bandaragama

இதன்போது அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளதுடன் மற்றைய அதிகாரி ஏரியில் விழுந்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கரவண்டி சாரதிக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தரும், முச்சக்கரவண்டியில் சாரதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.