
திருகோணமலை தந்தை மகள் உயிரிழப்பில் திடுக்கிடும் தகவல்.
திருகோணமலை - கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரஜஎல பிரதேசத்தில் நபரொருவர் தனது மகளுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றையதினம் (06) திருகோணமலையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலில் நபர் ஒருவர் , தனது மகளுடன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கந்தளாய் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த 38 வயதான ஒருவரும்இ 6 வயதுடைய மகளுமே உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவரின் மனைவி வெளிநாட்டில் பணிபுரிந்துவிட்டு அண்மையில் நாடு திரும்பிய, அங்கு அவர் வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பில் இருப்பதை அறிந்து கணவர் மனவேதனை அடைந்து மகளுடன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தந்தையும் மகளும் நீண்ட நேரமாக ரயில் தண்டவாளத்தின் அருகே நின்று கொண்டிருந்ததாகவும், ரயில் வந்ததும் மகளை தள்ளிவிட்டு தானும் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
உயிரிழந்தவர்களின் சடலம் கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.