
மகளின் திருமணத்திற்காக வங்கியில் சேமித்த பணத்தை கறையான் அரித்தது : தந்தை கவலை.
வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்ட பணத்தை கறையான் அரித்த சம்பவம் வாடிக்கையாளருக்கு துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் உத்தரபிரதேசத்திலுள்ள வங்கி ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உத்தரபிரசேம் மொரதாபாத்தில் வசிக்கும் அல்கா பதாக் என்பவர் சிறுதொழில் மற்றும் தனியார் கல்வி நிலையத்தில் கற்பித்து சேகரித்த பணத்தை வங்கியொன்றின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்துள்ளார்.
இவ்வாறு மகளின் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த ரூபா 18 இலட்சம் பணத்தை கறையான அரித்துள்ளமை கண்டுபிடிக்கபடப்டுள்ளது.இதனால் அவர் பெரும் துயரத்தில் உள்ளார்.