கொழும்பில் கார் மோதி கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் பலி.

கொழும்பில் கார் மோதி கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் பலி.

கொழும்பு -07 குருந்துவத்தை சுற்று வட்டத்திற்கு அருகில் நேற்று (05) மாலை இடம்பெற்ற கார் விபத்தில் படுகாயமடைந்த 25 வயதான பொலிஸ் உத்தியோகத்தர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

விபத்தில் படுகாயம்டைந்த பொலிஸ் உத்தியோகத்தர் இன்று (06) அதிகாலை உயிரிழந்துள்ளார். குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கடமையில் ஈடுபட்டிருந்த போதே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.

கொழும்பில் கார் மோதி கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் பலி | Police Officer Killed In A Car Collision Colomboஇந்நிலையில் இவ்விபத்தினை ஏற்படுத்திய தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணிபுரியும் நாரஹேன்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.