பதின்மவயது பெண் பெற்ற சிசு; கணவரை தேடும் பொலிஸார்!

பதின்மவயது பெண் பெற்ற சிசு; கணவரை தேடும் பொலிஸார்!

மொனராகலை புத்தல பகுதியில் இளம் வயதுடைய சிறுமி ஒருவர் , மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை (10) சிசுவொன்றை பிரசவித்துள்ளார்.

குழந்தை பெற்ற சிறுமிக்கு 16 வயதென்பது விசாரணைகளின் கண்டறியப்பட்டது. குறித்த சிறுமி, அப்பிரதேசத்தில் உள்ள இளைஞன் ஒருவருடன் காதல் வயப்பட்ட நிலையில் இருவரும் 2020 ஜூன் மாதமளவில் கணவன், மனைவியாக வாழ்ந்துள்ளனர்.

பதின்மவயது பெண் பெற்ற சிசு; கணவரை தேடும் பொலிஸார்! | A Teenage Girl Birth Baby Police Search Husbandகாதல் விவகாரத்தை அறிந்த சிறுமியின் தாய், தனது மகள் பாடசாலைக்குச் செல்வதை நிறுத்திவிட்டாள். இதனையடுத்து சிறுமி வீட்டிலேயே இருந்த நிலையில் அங்கு வந்த காதலன், தன்னுடைய வீட்டுக்கு சிறுமியை அழைத்துச் சென்றுவிட்டார்.

பதின்மவயது பெண் பெற்ற சிசு; கணவரை தேடும் பொலிஸார்! | A Teenage Girl Birth Baby Police Search Husbandஅங்கு சுமார் ஒன்றரை வருடங்களாக கணவன், மனைவியாக அவ்வருவரும் வாழ்ந்துவந்துள்ள நிலையில் சிறுமி தற்போது குழந்தை பிரசவித்துள்ளார். இந்நிலையில் குறித்த இளைஞர் தலைமறைவாகியுள்ள நிலையில் பொலிஸார் இளைஞரை தேடிவருகின்றனர்.