மக்கள் நடத்திய ஒரு விரல் புரட்சி - தெறிக்க விட்ட ‘விசில்’
தமிழ்நாடு இதுவரை சந்தித்த தேர்தல் களத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தல் களம் வித்தியாசமாக அமைந்தது. தேர்தல் களத்தில் விஜய்யின் பிரவேசம் கள நிலவரத்தையே மாற்றியது. அவரது வருகை எப்படி இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு தேர்தல் பிரசாரம் தொடங்கிய போதே ஏற்பட்டது. விஜய் அரசியலுக்கு புதிது... தேர்தலுக்கு புதிது... கட்சிக்கு கட்டமைப்பு எதுவும் இல்லை. இந்த சூழ்நிலையில் களத்தில் ஜாம்பவான்களாக இருக்கும் தி.மு.க., அ.தி.மு.க. போன்ற கட்சிகளை த.வெ.க. எப்படி எதிர்கொள்ள போகிறது? என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் ஏற்பட்டது. நடிகரை பார்த்து கூட்டம் கூடும். அது வாக்குகளாக மாறுமா? என்ற விவாதமும் எழுந்தது. இந்த பரபரப்பான நகர்வுகளின் நிறைவில் வாக்குப்பதிவு நாளும் வந்தது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை எல்லா தொகுதிகளிலும் அரசியல் கட்சிகள் திரும்பி பார்க்கும் வகையில் விசிலுக்கு வாக்குகள் அதிக அளவில் விழுந்து இருக்குமோ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதற்கு காரணம், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நிகழ்ந்த சம்பவங்கள்தான். பல தேர்தல்களை சந்தித்த முன்னணி கட்சிகள் கூட விசிலுக்கு விழுந்த வாக்குகளை பார்த்து ஆச்சரியப்பட்டன. 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிட்டது த.வெ.க. அந்த கட்சியை பொறுத்தவரை எல்லோருக்கும் தெரிந்த முகம் விஜய் என்ற ஒரே முகம்தான். அதை தாண்டி எந்த தொகுதியில் எந்த வேட்பாளர் நிற்கிறார் என்பது எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. அதுமட்டுமல்ல வாக்களித்தவர்களும் தங்கள் வேட்பாளர் யார்? என்று கூட தெரியாமல்தான் பெரும்பாலும் ‘விசில்’ சின்னத்தை பார்த்து வாக்களித்தார்கள் என்பதுதான் கள நிலவரம்.234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிட்டது த.வெ.க. அந்த கட்சியை பொறுத்தவரை எல்லோருக்கும் தெரிந்த முகம் விஜய் என்ற ஒரே முகம்தான். அதை தாண்டி எந்த தொகுதியில் எந்த வேட்பாளர் நிற்கிறார் என்பது எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. அதுமட்டுமல்ல வாக்களித்தவர்களும் தங்கள் வேட்பாளர் யார்? என்று கூட தெரியாமல்தான் பெரும்பாலும் ‘விசில்’ சின்னத்தை பார்த்து வாக்களித்தார்கள் என்பதுதான் கள நிலவரம்.இருந்தாலும் இந்த வாக்குகள் வெற்றிக்கு வழிவகுக்காது. புதிய கட்சி, புதிய எதிர்பார்ப்புடன் இளைய தலைமுறையினர் வாக்களித்து இருக்கிறார்கள் அவ்வளவுதான் என்று களத்தில் நின்றவர்கள் தங்களுக்கு தாங்களே ஆசுவாசப்படுத்திக் கொண்டார்கள். ஆனாலும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் மாற்றி யோசிக்க வைத்தது. அதிக அளவில் இளைய தலைமுறையினர் வாக்களித்து இருந்ததும் புதிய கட்சியின் வரவை பலர் எதிர்பார்த்ததும் நிச்சயம் தேர்தல் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. கருத்துக்கணிப்பில் முன்னணி நிறுவனங்கள் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. அணிகளுக்குதான் வெற்றி சாதகமாக இருக்கும் என்று கணித்தன. ஒரே ஒரு நிறுவனம் மட்டும் த.வெ.க. ஆட்சியை பிடிக்கும் என்று கணித்தன. தேர்தல் முடிவு வரும் முன்னே தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க. ஆகிய 3 கட்சிகளுமே ஆட்சியை பிடிக்கப்போவது தாங்கள்தான் என்ற நினைப்பில் அதற்கான முன்தயாரிப்பு வேலைகளிலும் இறங்கி விட்டார்கள்.அரியணை யாருக்கு? என்று முடிவு செய்யும் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடக்கம் முதலே எதிர்பாராத திருப்பங்களுடன் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அமைந்தது. ஒவ்வொரு சுற்றிலும் எந்த கட்சி முன்னிலை என்று ஒட்டுமொத்த தமிழகமும் ஆர்வமுடன் பார்த்து கொண்டு இருந்த நேரத்தில் விசிலின் சத்தம் பெரும்பாலான தொகுதிகளில் கேட்டது. தேர்தல் முடிவுகளை அது தெறிக்க விட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தடுமாற தொடங்கினார்கள். பல தேர்தல்களை சாதித்து அனுபவம் பெற்ற அமைச்சர்களும், முக்கிய பிரமுகர்களும் கூட விசிலின் தாக்கத்தால் தோல்வியை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். அந்த தொகுதிகளில் விசிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. காலையில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதும் கேட்க தொடங்கிய விசில் சத்தம் நேரம் செல்ல செல்ல குறையாமல் ஓங்கி ஒலித்துக் கொண்டே இருந்தது. இதனால் அ.தி.மு.க.வும், த.வெ.க.வும் கணிசமான தொகுதிகளை ஆக்கிரமிக்க தொடங்கியது. தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை 3-வது அணி அல்லது 3-வது கட்சி ஆட்சிக்கு வந்ததாக சரித்திரம் இல்லை. ஆட்சியை நிர்ணயம் செய்ததாகவும் வரலாறு இல்லை. அந்த வரலாறுகளை முறியடித்து த.வெ.க. புதிய வரலாறு படைத்துள்ளது. பாரம்பரியமான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி 1967-ல் முடிவுக்கு வந்தது. அதன் பிறகு தி.மு.க.வும், அ.தி.மு.க.வும்தான் இதுவரை மாறி, மாறி ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்றி வந்துள்ளன.1967, 1971, 1989, 1996, 2006, 2021 ஆகிய 6 தேர்தல்களில் தி.மு.க. வென்றது. 1977, 1980, 1984, 1991, 2001, 2011, 2016 ஆகிய 7 தேர்தல்களில் அ.தி.மு.க. மகுடம் சூடியது.இந்த 2 கட்சிகளையும் தாண்டி வேறு எந்த கட்சியாலும் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. இந்த இருக்கட்சிகளுமே கூட்டணி பலத்தோடுதான் தேர்தல்களில் வெற்றியும் பெற்றன.ஆனால் விஜய்க்கு எந்தவிதமான அரசியல் பின்புலமும் இல்லை. அனுபவம் மிக்க தலைவர்களின் பக்க பலமும் இல்லை. ஆனாலும் தேர்தலில் விஜய் என்ற தனிமனிதர் தனித்துவமான வெற்றியை பெற்று சாதித்துள்ளார். அவர் தேர்தல் பிரசாரத்தின்போது ‘கோடி, கோடியாக சினிமாவில் கிடைக்கும் வருமானத்தை விட்டு, விட்டு உங்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். நான் உங்களைத்தான் நம்பி இருக்கிறேன்’ என்றார்.அவரது நம்பிக்கை வீண்போகவில்லை. நம்பிய மக்களும் அவரை கைவிடவில்லை. தனது பிரசாரத்தின்போது, தனது இளம் வயது ரசிகர்கள், ரசிகைகளை பார்த்து உங்கள் வீடுகளில் உள்ள அம்மா, அப்பா, அத்தை, மாமா, மாமி, சித்தப்பா, சித்தி என்று எல்லோரையும் விசிலுக்கு வாக்களிக்க சொல்லுங்கள்’ என்றார். வீதிவீதியாக செய்யும் பிரசாரத்தை விட வீடு வீடாக நடந்த இந்த பிரசாரம்தான் மிகப்பெரிய வெற்றிக்கு அடித்தளம் அமைத்தது.இன்று மதியம் வரை வெளிவந்துள்ள தகவல்படி ஆளும் தி.மு.க. கூட்டணிக்கு சவால் விடும் வகையில், அ.தி.மு.க.வும், த.வெ.க.வும் தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. அதாவது 100-க்கும் மேல் தொகுதிகளை கைப்பற்றி முதலிடத்தில் த.வெ.க.வும், 2-வது இடத்தில் அ.தி.மு.க.வும், 3-வது இடத்தில் தி.மு.க.வும் உள்ளன.இன்னும் இறுதி முடிவு வரும் போது நிச்சயம் ஆட்சியை கைப்பற்றும் அளவுக்கு தனிப்பெரும் சக்தியாகவே த.வெ.க. இருக்கும் என்பது உறுதியாக தெரிகிறது. இன்னும் இறுதி முடிவு வரும் போது நிச்சயம் ஆட்சியை கைப்பற்றும் அளவுக்கு தனிப்பெரும் சக்தியாகவே த.வெ.க. இருக்கும் என்பது உறுதியாக தெரிகிறது.