காரில் பல அடி தூரம் இழுத்துசெல்லப்பட்ட ஆணின் உடல்! பரபரப்பு சம்பவம்.

காரில் பல அடி தூரம் இழுத்துசெல்லப்பட்ட ஆணின் உடல்! பரபரப்பு சம்பவம்.

டெல்லியின் மஹிபால்பூர் பகுதியருகே தேசிய நெடுஞ்சாலை 8 இல் நபர் ஒருவரின் உடல் காயங்களுடன் காணப்படுவதாக வசந்த் குஞ்ச் வடக்கு காவல் நிலையத்திற்கு தொலைபேசியினூடாகத் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து, போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று குறித்த சடலம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையின் பிரகாரம் அரியானாவின் பரிதாபாத் நகரை சேர்ந்த 43 வயதுடைய பிஜேந்தர் எனும் டாக்சி ஓட்டுநர் எனத் தகவலறியப்பட்டுள்ளது.

காரில் பல அடி தூரம் இழுத்துசெல்லப்பட்ட ஆணின் உடல்! பரபரப்பு சம்பவம் | Mans Body Dragged By Carஇதுபற்றிய வீடியோ ஒன்றும் வெளிவந்து பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

அதில், அந்த நபரின் உடல் காரில் பல அடி தூரம் இழுத்து செல்லப்பட்டு உள்ளது. குறித்த வீடியோ பற்றியும் விசாரணை நடந்து வருகிறது.

டெல்லியில் கஞ்சவாலா நகரில் சுல்தான்புரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் புது வருட தினத்தன்று, ஸ்கூட்டியில் தோழியுடன் சென்ற அஞ்சலி சிங் (வயது 20) என்ற இளம்பெண் மீது அதிகாலையில் கார் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்றது.

அந்த காரில் அஞ்சலி பல கி.மீ. தொலைவுக்கு இழுத்து செல்லப்பட்ட சம்பவம் அப்போது பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் அந்த இளம்பெண் உயிரிழந்து விட்டார். காரில் இருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.