
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விலகவுள்ள லஹிரு குமார.
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார, ஐசிசி உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பயிற்சியின்போது காலில் உபாதை ஏற்பட்டதையடுத்து போட்டிகளிலிருந்து அவர் விலகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் உபாதைக்கு உள்ளாகியுள்ள லஹிரு குமாரவுக்கு பதிலாக எதிர்வரும் போட்டிகளில் துஷ்மந்த சமீரவை அணியில் இணைத்துக் கொள்வதற்கு ஐசிசி தொழில்நுட்ப குழாம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.