கணவன் பலி; கள்ளக் காதலனுடன் சிக்கிய மனைவி

கணவன் பலி; கள்ளக் காதலனுடன் சிக்கிய மனைவி

மாவனெல்ல விபத்தொன்றில் கணவன் படுகாயமடைந்து பலியான சம்பவத்தை அடுத்து அவரது மனைவியும் கள்ளக் காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாவனெல்ல எலயபொல வீதிப் பகுதியில் காரொன்று மோதியதில் படுகாயமடைந்த ஒருவர் மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கடந்த 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணவன் பலி; கல்லக் காதலனுடன் சிக்கிய மனைவி | After Death Of The Husband The Wife Was Arrestedஇச்சம்பவம் தொடர்பான விசாரணையில் இது சாதாரண விபத்து அல்ல இறந்தவரின் மனைவி மற்றும் அவரது கள்ளக் காதலனும் இணைந்து செய்த கொலை எனத் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்தே உயிரிழந்த கணவனின் மனைவியும் அவரது கள்ளக் காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.