தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலை மாணவர்கள்

தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலை மாணவர்கள்

இலங்கையில் கடந்த 9 மாதங்களில், 14 வயதுக்கு உட்பட்ட 120 பாடசாலை மாணவர்கள் தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தொழுநோய் கட்டுப்பாட்டு இயக்கம் கூறுகிறது.

கொழும்பு மாவட்டத்தில் 31 மாணவர்கள் தொழுநோயால் பாதிப்படைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவிலான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பதிவாகியுள்ளது.

தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலை மாணவர்கள் | School Students Affected By Leprosyமேலும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 18 பாடசாலை மாணவர்களும் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த 11 மாணவர்களும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த காலகட்டத்தில், முழு நாட்டிலும் 1150 தொழுநோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.