பாடசாலைக்குச் சென்ற தமிழ் மாணவியை காணவில்லை!

பாடசாலைக்குச் சென்ற தமிழ் மாணவியை காணவில்லை!

முல்லைத்தீவு பகுதியில் பாடசாலை சென்ற 15 வயதுடைய மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது தாயாரால் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிழவன்குளம் பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய தரம் ஒன்பதில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் கடந்த முதலாம் திகதி பாடசாலைக்கு சென்ற சமயம் காணாமல் போய் இருப்பதாக அவரது தாயாரால் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாடசாலைக்குச் சென்ற தமிழ் மாணவியை காணவில்லை! பொலிஸ் நிலையத்தை நாடிய தாய் | School Girl Missing In Mangulam Mullaithvu

இதுவரை குறித்த சிறுமி தொடர்பான தகவல்கள் எதுவும் தமக்கு கிடைக்கவில்லை என சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார்.

தென்பகுதியில் இருந்து குறித்த பிரதேசத்திற்கு வேலைக்காக வந்து தங்கியிருந்த ஒருவரே மேற்படி சிறுமியை கடத்திச் சென்றுள்ளதாகவும் அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் விசாரணைகளை முன்னெடுத்து வரும் மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாடசாலைக்குச் சென்ற தமிழ் மாணவியை காணவில்லை! பொலிஸ் நிலையத்தை நாடிய தாய் | School Girl Missing In Mangulam Mullaithvu