அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறாரா மஹிந்த.. அவரே வெளியிட்ட அறிவிப்பு.

அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறாரா மஹிந்த.. அவரே வெளியிட்ட அறிவிப்பு

அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் ஒருபோதும் எனக்கு இல்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ Mahinda rajapaksa தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு கட்சியும் மாநாடுகளை நடத்த வேண்டும் என்றும், அதன் மூலம் கட்சியின் பலத்தைக் காட்ட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறாரா மஹிந்த? அவரே வெளியிட்ட அறிவிப்பு | Mahinda Rajapaksa Retiring From Politicsபெரும்பான்மையான மக்கள் தமது கட்சியுடன் திரண்டுள்ளதாக தெரிவித்துள்ள மஹிந்த ராஜபக்ஷ, சில மாற்றங்கள் ஏற்பட்டாலும் மக்கள் எமது கட்சியை விட்டு நகரவில்லை என்பதை கட்சி மாநாடு நிரூபித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தகுதி தனக்கு இல்லை என்றும், கட்சியைச் நேர்ந்த யாராக இருந்தாலும் வெற்றிபெற ராஜபக்ஷக்கள் பாடுபடுவார்கள் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவது தொடர்பில் தனக்கு தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.