தமிழர் பகுதியில் தாயை கண்டதும் ஒடிச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம்! கதறும் தாய்.

தமிழர் பகுதியில் தாயை கண்டதும் ஒடிச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம்! கதறும் தாய்.

மட்டக்களப்பு பகுதியொன்றில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் நேற்றைய தினம் (16-12-2023) ஏறாவூர் பொலிஸ் பிரிவு ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் ஏறாவூர், தாமரைக்கேணியை சேர்ந்த 16 வயது விசேட தேவையுடைய அமீர்தீன் யாசிர் அறபாத் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தமிழர் பகுதியில் தாயை கண்டதும் ஒடிச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம்! கதறும் தாய் | Batticaloa Area Accident Bus Hit Child Boy Died

தாயை எதிர்பார்த்து பேருந்து தரிப்பிடத்தில் இருந்த இச்சிறுவன், தாயை கண்டதும் வீதியை கடந்து தாயிடம் ஓடிச் செல்லும் போது, பிரதான வீதியால் பயணித்த தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு சொந்தமான பஸ் ஒன்றுடன் மோதியுள்ளது.

இதன்போது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து பேருந்தின் சாரதி ஏறாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுவனின் சடலம் 1990 விசேட அம்பியுலன்ஸ் மூலம் ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

தமிழர் பகுதியில் தாயை கண்டதும் ஒடிச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம்! கதறும் தாய் | Batticaloa Area Accident Bus Hit Child Boy Died

ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுகோளின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற மரண விசாரணை அதிகாரி எம்.எஸ். எம்.. நஸீர், விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்காக பிரேதத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தார்.

தமிழர் பகுதியில் தாயை கண்டதும் ஒடிச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம்! கதறும் தாய் | Batticaloa Area Accident Bus Hit Child Boy Diedமேலும், சிறுவனின்  தாய் யாசகம் பெறுவதற்காக கல்முனை சென்று ஊர் வரும்போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.