
கால்பந்து போட்டியின் போது ஏற்பட்ட அசம்பாவிதம்: துரதிஷ்டவசமாக உயிரிழந்த வீரர்!
கால்பந்து போட்டியின் போது மின்னல் தாக்கியதில் வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மற்றும் கால்பந்து உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் மேற்கு ஜாவாவின் பாண்டுங்கில் உள்ள சிலி வாங்கி மைதானத்தில் நேற்றையதினம் (11-02-2024) இடம்பெற்றுள்ளது.
இந்தோனேசியாவில் நேற்றையதினம் FLO FC பாண்டுங் மற்றும் FBI சுபாங் அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது.
குறித்த இந்த போட்டி நடந்து கொண்டிருக்கும் போது கால்பந்து வீரர் ஒருவர் மீது திடீரென மின்னல் தாக்கியதில் சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார்.
மேலும், இச் சம்பவத்தில் 35 வயது வீரர் ஒருவரே உயிரிழந்தார். இந்த சோகமான நிகழ்வு சக வீரர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.