கையில் குழந்தைகளை வைத்திருந்த இரு பெண்களின் மோசமான செயல்!
குழந்தைகளை கையில் ஏந்தியவாறு ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரு பெண்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர் .
அத்துடன் போதைப்பொருளை கொள்வனவு செய்ய சென்ற மூன்று நபர்களும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொரட்டுவை , எகொடஉயன பிரதேசத்தைச் சேர்ந்த 35 மற்றும் 24 வயதுடைய இரு பெண்களும் அம்பலாங்கொடை, பலப்பிட்டிய ஆகிய பிரதேசங்களை சேர்ந்த மூன்று நபர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைதானதாக தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.