தென்னிலங்கையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி

தென்னிலங்கையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் பட்டப்பகலில் வீட்டில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கொடூர சம்பவம் நேற்று (24.02.2024) முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அதே பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய எஸ்.டயானா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒருதலைக் காதல் விவகாரத்தால் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தென்னிலங்கையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி | Schoolgirl Who Was Hacked To Death In South Lanka

இதன்போது கொலைச் சந்தேகநபரான 21 வயது இளைஞரைக் கைது செய்துள்ள பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.