
சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு நற்செய்தி
2024 (2025) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் ஜூலை மூன்றாவது வாரத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன், பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என்று சமூக ஊடகங்களில் சமீபத்திய நாட்களில் பரவி வரும் பல்வேறு செய்திகள் தவறானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெறும் பரீட்சைகள் திணைக்களம் அண்மையில் அறிவித்திருந்தது.
அதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 26 முதல் ஜூலை 21, 2025 வரை நிகழ்நிலையில் (Online) கோரப்படும் என்றும் திணைக்களம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.