
யாழில் சட்டவிரோதமாக கடலட்டைகளை பிடித்த நால்வர் கைது
யாழ். வடமராட்சி (Jaffna) மாமுனை கடற்பகுதியில் சட்டவிரோதமாக இரவு நேரத்தில் கடலட்டைகளை பிடித்த நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை, இன்று (15.05.2024) கடற்படையால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத தொழில் முறைகளை தடுக்கும் நோக்கில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் திடீர் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு பலரை கைது செய்துவருகின்றனர்.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக இன்று அதிகாலை மாமுனை கடற்பகுதியில் குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட நால்வரும் கடற்படை முகாம் அழைத்து வரப்பட்டு விசாரணைகளின் பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.