மன்னார் நோக்கி பயணித்த பேருந்து சாரதிக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
கொழும்பில் இருந்து மன்னாருக்கு 109 கிராம் தங்கக்கட்டியை கொண்டு சென்ற நபர் ஒருவர் நேற்று மாலை (07) கைது செய்யப்பட்டார். குறித்த தங்கம் ஒரு மில்லியன் வரையில் பெறுமதியானது என காவல்துறையினர் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சாரதி என தெரிவிக்கப்படுகிறது.
35 வயதுடைய குறித்த நபர் மன்னார் பகுதியில் வசித்து வருபவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.இந்நிலையில் குறித்த சந்தேக நபரை மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ள நிலையில், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.