ஆசிரியர் நியமனங்களை வழங்குவது தொடர்பில் வெளியான புதிய தகவல்

ஆசிரியர் நியமனங்களை வழங்குவது தொடர்பில் வெளியான புதிய தகவல்

எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் 2,300 பட்டதாரி ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பாடசாலையொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேட்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பட்டதாரிகள் அனைவரும் பரீட்சைக்குத் தோற்றிய பின்னர் நேர்முகத் தேர்வுக்குத் தோற்றியுள்ளதாக அமைச்சர் கூறுகிறார்.

கல்வியை டிஜிட்டல் மயமாக்குதல்

கணிதம், இரசாயனவியல், பௌதீகவியல், உயிரியல், சிங்களம், ஆங்கிலம், தமிழ் ஊடகம் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் வெளிநாட்டு மொழிகளிலும் பட்டதாரிகளுக்கு இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

ஆசிரியர் நியமனங்களை வழங்குவது தொடர்பில் வெளியான புதிய தகவல் | New Information Released Teacher Appointments

கல்வியை டிஜிட்டல் மயமாக்குவது கரும்பலகையில் இருந்து பெரிய திரைக்கு மாறுவது மட்டுமல்ல என்று குறிப்பிட்ட அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, எதிர்வரும் ஆகஸ்ட்-செப்டெம்பர் மாதத்திற்குள் பாடசாலைகளுக்கு 2500 அதிநவீன 'ஸ்மார்ட் பலகைகள்' வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.