தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேகத்திலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு

தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேகத்திலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்த்தேகத்திலிருந்து இளைஞனின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (14) புதன்கிழமை பிற்பகல் நீர்த்தேக்கத்தில் சடலமொன்று மிதப்பதைக் கண்டு பிரதேசவாசிகள் தலவாக்கலை பொலிஸருக்கு அறிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸாரால் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட இளைஞன் தலவாக்கலை தோட்டம் மேல் பிரிவு தலவாக்கலையை சேர்ந்த பாலதண்டைதபாணி மதுஷன் 21 வயதுடைய இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேகத்திலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு | Body Recovered Kothmalai Reservoir Thalawakkala

மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் நீரில் அடித்துக் கொண்டு வந்து உயிரழந்தாரா? அல்லது நீர் தேக்கத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது எவராவது கொலை செய்து நீர்தேக்கத்தில் வீசினார்களா? என்பது தொடர்பாக பலகோணங்களில் தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.