இன்று முதல் வழமைக்கு திரும்பிய பொதுப் போக்குவரத்து சேவைகள்

இன்று முதல் வழமைக்கு திரும்பிய பொதுப் போக்குவரத்து சேவைகள்

இரண்டு மாத காலத்துக்கு மேலாக இடைநிறுத்தப்பட்டிருந்த பொதுப்போக்குவரத்து சேவைகள் இன்று முதல் வழமைக்கு திரும்பின.

 

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதன் பின்னர் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கான பொதுப்போக்குவரத்து சேவைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன.

 

சுகாதார பிரிவினரின் வழிகாட்டல்களுக்கு அமைய பேருந்துகள் மற்றும் புகையிரத சேவைகளை இயக்கவுள்ளதாக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.