முகக் கவசம் அணிவதால் ஏற்பட்டுள்ள மாற்றம்! இலங்கையர்களுக்கு கிடைத்த நன்மை

முகக் கவசம் அணிவதால் ஏற்பட்டுள்ள மாற்றம்! இலங்கையர்களுக்கு கிடைத்த நன்மை

தற்போதைய சூழ்நிலையில் அனைவரும் முகக் கவசம் அணிவதனால் இலங்கையில் சுவாச நோயாளர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைவடைந்துள்ளதாக சுவாச நோய் நிபுணர்களின் சங்கத்தின் பிரதானி, கண்டி வைத்திய சங்கத்தின் தலைவர் துஷ்யந்த மெதகெதர தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்தும் நோக்கில் முகக் கவசம் அணிந்தமையினால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அவர்,

சுவாச நோய்களில் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு நோய் தன்மை பெரியளவு குறைந்துள்ளது, இதனால் நோயாளிகளுக்கு மருந்து வழங்கும் நடவடிக்கையும் பெருமளவு குறைவடைந்துள்ளது.

முகக் கவசம் அணிவதனை பழக்கமாக தொடர்ந்து மேற்கொண்டால் பாதுகாப்பு நடவடிக்கையாக என்று கருதுகிறேன். இதன் மூலம் நோய் ஏற்படும் கிருமிகள் உடலுக்குள் நுழைவதும், தங்கள் உடலில் உள்ள கிருமிகள் சமூகங்களுககு செல்வதனையும் தடுக்க முடியும் என்றார்.