500 ரூபாய்காக கொடூர கொலை ; விசாரணைகள் ஆரம்பம்

500 ரூபாய்காக கொடூர கொலை ; விசாரணைகள் ஆரம்பம்

இந்திய தலைநகர் டெல்லியின் நியூ உஸ்மான்பூர் பகுதியில் உள்ள பூங்காவில் இளைஞர் ஒருவர் நேற்று (30) மாலை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த பொலிஸார் குறித்த இளைஞரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். ஆனால், இளைஞரை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.

500 ரூபாய்காக கொடூர கொலை ; விசாரணைகள் ஆரம்பம் | Youth Stabbed To Death Over 500 Rupeesஇது தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த பொலிஸார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை தொடங்கினர். விசாரணையில் கொல்லப்பட்ட இளைஞர் 500 ரூபா பணத்திற்காக  கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.

இளைஞரிடமிருந்து 500 ரூபா பணத்தை திருட இரு சிறுவர்கள் உட்பட 3 பேர் முயற்சித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட மோதலில் இளைஞரை  3 பேரும் கத்தியால் குத்திக்கொன்றுள்ளனர்.

இதையடுத்து  கொலை செய்த சிறுவர்கள் உட்பட 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.