
24 மணிநேர கடவுசீட்டு விநியோகம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு
ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 24 மணி நேரம் செயற்படும் சேவை மூன்று நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் 15, 16, 17 ஆம் திகதிகளில் குறித்த சேவை நடைபெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஒரு நாள் மற்றும் வழமையான சேவைகளை வழங்குவதற்கான துண்டு சீட்டுகள் குறித்த நாட்களில் நண்பகல் 12 மணிவரை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.