ஏப்ரல் மாதத்தில் இலங்கைக்கு வந்து குவிந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்

ஏப்ரல் மாதத்தில் இலங்கைக்கு வந்து குவிந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்

ஏப்ரல் மாதத்தின் கடந்த நான்கு வாரங்களில் மட்டும் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

அந்தவகையில், 150,000  சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது.

அதன்படி இந்தியாவிலிருந்தே (India) அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா, ரஷ்யா, ஜேர்மனி, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், சீனா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் அதிக எண்ணிக்கையில் நாட்டிற்கு வந்துள்ளனர்.

ஏப்ரல் மாதத்தில் இலங்கைக்கு வந்து குவிந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் | 15000 Foreign Tourist Visit To Sri Lanka In April

இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் 866,596 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.