
தனது தாயாருடன் இலங்கைக்கு வந்த வெளிநாட்டு இளைஞனுக்கு நேர்ந்த துயரம்
ஹபரதுவ, லியனகொடவில் உள்ள சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த 36 வயது மோல்டோவா நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஹோட்டலின் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்ததாக ஹபரதுவ காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறையினரின் தகவலின்படி, வெளிநாட்டவர் பெப்ரவரி 8 ஆம் திகதி தனது தாயுடன் இலங்கைக்கு(sri lanka) வந்திருந்தார், அவர் இன்று(27) மாலை ஹோட்டலின் நீச்சல் குளத்தில் இறந்து கிடப்பதைக் கண்ட தாயார் ஹோட்டல் மேலாளருக்குத் தகவல் அளித்தார், பின்னர் அவர் காவல்துறைக்கு தகவல் அளித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் நீச்சல் குளத்திற்கு அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர், அதில், இறந்தவர் நருபாய் மிஹைல் என அடையாளம் காணப்பட்டார்.
ஏப்ரல் 26, 2025 அன்று இரவு 10:45 மணியளவில் நீச்சல் குளத்தில் இறங்கியதைக் கண்டறிந்தனர்.நீச்சல் குளத்தில் இறங்கிய சிறிது நேரத்திலேயே அவர் நோய்வாய்ப்பட்டு, இரவு 11:30 மணியளவில் நான்கு அடி ஆழமுள்ள நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்தது கண்டறியப்பட்டது.
கராபிட்டிய மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, அதே நேரத்தில் ஹபரதுவ காவல்துறையினரால் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.