
8 மாதங்களுக்கு முன் உயிரிழந்தவரின் சடலம் மீட்பு
வீடொன்றில் இருந்து சுமார் 8 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் நேற்று (28) இரவு கெஸ்பேவ, மடபாத்த - மாகந்தன பட்டுவந்தர பகுதிகளில் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உடல் மிகவும் சிதைந்து அடையாளம் காண முடியாத அளவுக்கு இருந்ததாகவும், மரணம் சுமார் 8 மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் பெண்ணாக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில் சம்பவ இடத்தில் நீதவான் விசாரணை இன்று (29) இடம்பெறவுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் கெஸ்பேவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.