
இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலாப் பயணிகள்
கடந்த ஏப்ரல் மாதத்தில் அண்ணளவாக ஒரு லட்சத்தி எழுபதினாயிரம் அளவிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதத்தின் முதல் 28 நாட்களில் மட்டும் ஒரு லட்சத்தி 65 ஆயிரத்து 113 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
அதன் பிரகாரம் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் மாத்திரம் 8 லட்சத்தி 87 ஆயிரத்து 379 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இவர்களின் வருகை மூலம் ஆயிரத்து 122 மில்லியன் டொலர்களை வருமானமாக இலங்கை ஈட்டிக் கொண்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.