
மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவன்!
பொலன்னறுவை வடக்கு பகுதியில் நபர் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்றையதினம் (3) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில், 49 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.
குடும்பத் தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.