விடுமுறையை மகிழ்ச்சியாக களிக்க சென்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம்

விடுமுறையை மகிழ்ச்சியாக களிக்க சென்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம்

 நீச்சல் தடாகத்தில் விழுந்து நான்கு வயதான சிறுவன், உயிரிழந்துள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கெஸ்பேவ, கஹபொல பகுதியில் உள்ள விடுமுறை விடுதியில் தனது பெற்றோருடன் மகிழ்ச்சியாக இருந்த போதே இத் துயர சம்பவம் ஏற்பட்டுள்ளது.]

விடுமுறையை மகிழ்ச்சியாக களிக்க சென்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம் | Boy Dies Swimming Pool At Holiday Resortஉயிரிழந்தவர் தம்புத்தேகம, இகிலி வெவ பகுதியைச் சேர்ந்த ஹேவா எம்பிட்டகே சித்தேவ் தனுல்யா என்ற நான்கு வயது குழந்தை ஆவார். சில நாட்களுக்கு முன்பு தனது தந்தையுடன் தனது தந்தையின் சகோதரியின் வீட்டிற்கு வந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சகோதரனும் சகோதரியும் தங்கள் சிறு குழந்தைகளுடன் பொழுதை கழிக்க விடுதிக்கு வந்ததாகவும், தாங்கள் சிறிது தூரத்தில் தங்கியிருந்துள்ளனர்.

இதன்போது குழந்தைகளை அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நீச்சல் தடாகத்தில் மகிழ்விக்க விட்டுவிட்டதாகவும் பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.