களவெடுக்க சென்றவர் சடலமாக மீட்பு

களவெடுக்க சென்றவர் சடலமாக மீட்பு

காலி - மீட்டியாகொடை பிரதேசத்தில் உள்ள சீனிகம ஸ்ரீ மகா தேவோல் தேவாலயத்தில் இருந்து நேற்று (6) காலை ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மீட்டியாகொடை பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

களவெடுக்க சென்றவர் சடலமாக மீட்பு | Robber Found Dead Galle Churchஇவர் தேவாலயத்தில் உள்ள சிலை ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த விலைமதிப்பற்ற இரத்தினத்தை திருடுவதற்காக தேவாலயத்திற்குள் நுழைந்திருந்த போது ஏதேனுமொரு காரணத்தினால் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

தேவாலயத்தின் ஒரு ஜன்னல் உடைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.