பெண்களை வெளிநாட்டுக்கு கடத்திய 6 அதிகாரிகள் பதவி இடைநீக்கம்

பெண்களை வெளிநாட்டுக்கு கடத்திய 6 அதிகாரிகள் பதவி இடைநீக்கம்

பயிற்சி பெறாத பெண்களை வெளிநாட்டு வேலைகளுக்காக கடத்தி 2.5 பில்லியன் ரூபாய் மோசடி செய்த , இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மேலதிக பொது மேலாளர் உட்பட ஆறு அதிகாரிகள் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தகவல்களின்படி, 2022 மற்றும் ஓகஸ்ட் 2024 க்கு இடையில், சுமார் 35,000 பெண்கள் கட்டாய முன் புறப்படும் பயிற்சியை முடிக்காமலேயே வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

பெண்களை வெளிநாட்டுக்கு கடத்திய 6 அதிகாரிகள் பதவி இடைநீக்கம் | 6 Officers Suspended For Smuggling Women Abroadஇதன்போது குறித்த பெண்களிடம் இருந்து தலா 100,000 ரூபாய் முதல் 140,000 வரை வசூலிக்கப்பட்டதாகவும், முன் அனுபவத்தை பொய்யாக சான்றளிக்க போலி ஆவணங்கள் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

அதிகாரிகளின் மோசடி அம்பலப்படுத்தப்பட்ட நிலையிலேயே தொடர்புயை 6 அதிகாரிகள் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.