இந்தியாவில் வேகமெடுக்கும் கோவிட் 19 ; முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்

இந்தியாவில் வேகமெடுக்கும் கோவிட் 19 ; முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்

இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கண்டறியப்படுவது அதிகரித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், கடந்த 2 நாட்களில் மட்டும் புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 2,710 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வேகமெடுக்கும் கோவிட் 19 ; முகக்கவசம் அணிய அறிவுறுத்தல் | Covid 19 Accelerating In India Advice Face Masksமத்திய அரசின் சார்பில் அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். அடிக்கடி கைகளை கழுவுதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் என வழக்கமான நடைமுறைகளை தான் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் இணை நோயுள்ளவர்கள் முகக்கவசம் அணிந்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும் இது கட்டாயம் கிடையாது. ஆனால், இதைக் கடைபிடிப்பது நல்லது என குறிப்பிடப்பட்டுள்ளது.