ஆர்.சி.பி சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு

ஆர்.சி.பி சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு

ஐ. பி. எல் . தொடரின் சம்பியன் கிண்ணத்தை வென்ற ஆர்.சி,பி அணியை வரவேற்க ஆயிரக்கணக்கான இரசிகர்கள் பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் திடலில் குவிந்திருந்தனர்.

இந்நிலையில், சின்னசாமி கிரிக்கெட் திடலில் 6ஆவது நுழைவாயில் பகுதியில் அத்துமீறி பலர் உள்ளே நுழைய முயன்றனர்.

ஆர்.சி.பி சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு | Compensation Families Deceased On Behalf Of Rcb

இதன்போது 6ஆவது நுழைவாயில் பகுதியில் ஏராளமான இரசிகர்கள் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்ததாகவும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், ஆர்சிபி அணி நிர்வாகம், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்திய ரூபாயின் மதிப்பின் படி, தலா 10 இலட்சம் நிவாரணத்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது.