
மலேரியா தொற்றால் ஒருவர் யாழ் போதனாவில் பலி
யாழ் (Jaffna) போதனா வைத்தியசாலையில் மலேரியா தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நெடுந்தீவைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்தநிலையில், நேற்றைய தினம் (09) அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடுமையான நோய் நிலையுடன் கடந்த ஆறு நாட்களாக குறித்த நபர், யாழ் போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்தநிலையில், கடுமையான தொற்று மற்றும் பல்வேறு அங்கங்களின் செயற்பாட்டு இழப்பால் நேற்றைய தினம் (09) அவர் உயிரிழந்துள்ளார்.
மருத்துவ பரிசோதனைகளின் அடிப்படையில், அவர் (Malaria Falciparum) மலேரியா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததை யாழ் போதனா வைத்திய சாலை உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.