தமிழ்க்கொலை செய்யும் இலங்கை அரச பேருந்துகளும், தனியார் பேருந்துகளும்!
இலங்கையிலுள்ள ஊர்களின் பெயர்களை உருப்படியாய் எழுதாமல் ஊரையும் கொச்சைப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளப்பதிவு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்க்கொலை செய்யும் அளவில் இலங்கை அரச பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் இருப்பது கவலையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழுக்கு உரிய இடமில்லாமையால், முற்போக்கான ஒடுக்குமுறையின் வெளிப்பாடாக இது பார்க்கப்படுகிறது.





