நடுவானில் மாயமான சரக்கு விமானம்

நடுவானில் மாயமான சரக்கு விமானம்

பாகிஸ்தானிய சரக்கு விமானம் ஒன்று காணாமல் போனதாக பாகிஸ்தான் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமானத்தில் ஐந்து பணியாளர்களுடன் செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 9:21 மணிக்கு (ஜிஎம்டி 16:21) போயிங் 737 விமானம் தொடர்பை இழந்ததாக பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் குறிப்பிட்டது.

காணாமல் போன விமானத்தைக் கண்டறிய பல்வேறு அமைப்புகள் மூலம் கடலில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக ஆணையம் கூறியது.

 

தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது

ஷார்ஜாவில் இருந்து கராச்சிக்கு சென்று கொண்டிருந்த K2 எயார்ர்வேஸ் நிறுவனத்தின் B737 சரக்கு விமானத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 9.18 மணிக்கு நெவிகேஷன் சிஸ்டமில் கோளாறு ஏற்பட்டதாகவும், கராச்சி பகுதி கட்டுப்பாட்டு மையம் (ACC) உடனடியாக அதற்கு வழிகாட்டியதாகவும் அதிகாரசபை இது குறித்த எக்ஸ் தள பதிவில் தெரிவித்தது.

நடுவானில் மாயமான சரக்கு விமானம் | Cargo Plane Suddenly Vanishes Over Ocean

இருப்பினும், இரவு 9.22 மணிக்கு, அந்த விமானம் திசையை வேகமாக மாற்றிக்கொண்டு மிக வேகமாக கீழே இறங்குவது ரேடாரில் காணப்பட்டது.

அதைத் தொடர்ந்து, கராச்சியில் இருந்து மேற்கே சுமார் 155 கடல் மைல் (NM) தொலைவில் ரேடார் தொடர்பு மற்றும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது," என்று அது கூறியது.

ஐந்து பணியாளர்கள்: இந்த சம்பவத்தை தொடர்ந்து, மீட்பு ஒருங்கிணைப்பு மையம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டதாகவும், காணாமல் போன விமானத்தை கண்டறிய பல்வேறு அமைப்புகள் மூலம் கடலில் ஒருங்கிணைந்த தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டதாகவும் ஆணையம் மேலும் தெரிவித்தது.

விமானத்தில் ஐந்து பணியாளர்கள் இருந்தனர் என்று பாகிஸ்தான் விமான நிலைய அதிகாரசபை கூறியது.