யாழில் ஹெரோயினுடன் ஒருவர் கைது
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருநகர் பகுதியில் குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று(18.09.2025) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் போது 120 மில்லி கிராம் நிறையுடைய ஹெரோயின் கைது செய்யப்பட்டவரிடமிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
