
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்புமனுக்களை நிராகரிக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்புமனுக்களை நிராகரிக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனு உயர் நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் மற்றும் அதன் செயலாளரின் சட்டபூர்வமான தன்மையை எதிர்த்து ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒஷல ஹேரத் குறித்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் குறித்த மனு இன்று (செவ்வாய்க்கிழமை) உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே குறித்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் வேட்பாளர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்